ஷாட்ஸ்

மும்பை வெடிகுண்டு தாக்குதல் - முக்கிய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

Published On 2022-06-25 07:21 GMT   |   Update On 2022-06-25 07:22 GMT

மும்பையில் கடந்த 2008, நவம்பரில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் சஜித் மிரை பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் பாகிஸ்தான் போலீசார் கைதுசெய்தனர். லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

Similar News