புதுச்சேரி
பயனாளிகளுக்கு வீடு கட்ட தவணைத் தொகை-எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
- வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணையை பெற எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
- இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணை மற்றும் விடுபட்ட 2 மற்றும் 3-ம் தவணைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு விரைந்து நிதியுதவி கிடைக்க எதிர்கட்சி தலைவர் சிவா நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி 23 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் அவர்களது பெயர்களில் வங்கிகளில் செலுத்தப்பட்டதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.