உலகம்
போப் பிரான்சிஸ்

உக்ரைன் அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்- போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

Published On 2022-03-02 09:56 GMT   |   Update On 2022-03-02 09:56 GMT
சாம்பல் புதன்கிழமையை யொட்டி உக்ரைனின் அமைதிக்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
வாடிகன்:

சாம்பல் புதன்கிழமையை யொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் விடுத்துள்ள செய்தியில், ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். 

வன்முறையின் கொடூரமான தீமைக்கு ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற கடவுளின் ஆயுதங்களால் பதில் கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்தார். இதனால் உக்ரைனின் அமைதிக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்’ என்றார்.
Tags:    

Similar News