உலகம்

பிஷப்புக்கு கத்திக்குத்து: ஆஸ்திரேலியாவில் 7 சிறுவர்கள் கைது

Published On 2024-04-25 05:09 GMT   |   Update On 2024-04-25 05:09 GMT
  • வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது.
  • பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News