செய்திகள்
கிரீஸ் நாட்டில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்களில் பலர் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பியோடினர்.
இந்த நிலநடுக்கத்தால் இடிந்த தேவாலய இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதவிர 9 பேர் காயமடைந்து உள்ளனர்.
பழைய கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.