செய்திகள்
ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து- 9 பேர் பலி
கஜகஸ்தான் ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
நூர் சுல்தான்:
கஜகஸ்தான் நாட்டின் ஜாம்பில் மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
சேமிப்பு அறையில் இருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் தீப்பற்றியது. தீ ராணுவ தளத்தின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இந்த வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 90 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.