செய்திகள்
மூதாட்டி வேலு பாப்பானி

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி மரணம்

Published On 2020-12-31 08:36 GMT   |   Update On 2020-12-31 08:36 GMT
இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி வேலு பாப்பானி மரணம் அடைந்தார்.

கொழும்பு:

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டியாக இருந்தவர் வேலு பாப்பானி. 117 வயதுடைய இவர் தெடம்கொடாவில் உள்ள குளோடன் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். 1903-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்த இவர், ‘இலங்கையின் மூத்த தாய்’ என்று கவுரவிக்கப்பட்டார்.

இவரை மகாலட்சுமி என்ற பெண் பராமரித்து வந்தார். இந்த நிலையில் உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 29-ந்தேதி நாகொட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவர் மரணம் அடைந்தார்.

Tags:    

Similar News