செய்திகள்
டிரம்ப்

வாஷிங்டன் கோர்ட்டில் இந்தியரை நீதிபதியாக நியமிக்க டிரம்ப் முடிவு

Published On 2020-06-27 03:27 GMT   |   Update On 2020-06-27 03:27 GMT
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக அமெரிக்கவாழ் இந்தியர் விஜய் சங்கர் என்பவரை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் :

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. வாஷிங்டனில் மிக உயர்ந்த நீதிமன்றம் இதுவே ஆகும். அந்த கோர்ட்டின் இணை நீதிபதியாக அமெரிக்கவாழ் இந்தியர் விஜய் சங்கர் என்பவரை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தால், விஜய் சங்கர் அப்பணியில் நியமிக்கப்படுவார். அவர் தற்போது நீதித்துறையில் மனுக்கள் பிரிவு மூத்த வக்கீலாக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு வாஷிங்டனில் தனியாக வக்கீல் தொழில் செய்து வந்தார். ஒரு நீதிபதியிடம் சட்ட குமாஸ்தாவாகவும் இருந்துள்ளார்.
Tags:    

Similar News