செய்திகள்
மாஸ்டர்கார்டு தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா

நியூயார்க் மறுதிறப்பு திட்டம் - ஆலோசனை குழுவில் 3 இந்தியர்கள்

Published On 2020-04-30 10:17 GMT   |   Update On 2020-04-30 10:17 GMT
நியூயார்க்கில் வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களை படிப்படியாக திறக்க நியமிக்கப்பட்ட ஆலோசனை வாரிய குழுவில் 3 அமெரிக்க இந்தியர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. தற்போது, பலி எண்ணிக்கை குறைந்து வருவதால், நியூயார்க் மாகாணத்தில் வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களை படிப்படியாக திறக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கு வழிகாட்ட கவர்னர் ஆன்ட்ரூ குவாமோ, ஒரு ஆலோசனை வாரியம் அமைத்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெற்ற இக்குழுவில், 3 அமெரிக்க இந்தியர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

மாஸ்டர்கார்டு தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, டாண்டன் கேபிடல் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரிகா டாண்டன், நியூயார்க் ஓட்டல் சங்க தலைவர் விஜய் தண்டபாணி ஆகிய 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட ஜனாதிபதி டிரம்ப் அமைத்த குழுவிலும் அஜய் பங்கா இடம் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News