செய்திகள்
விபத்தில் உருக்குலைந்த வாகனங்கள்

தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து- 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

Published On 2020-03-11 10:15 GMT   |   Update On 2020-03-11 12:10 GMT
தென் ஆப்பிரிக்காவில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாகினர்.
ஜோகனஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், மற்றொரு இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. எல்டோரடோ பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. 

இரண்டு வாகனங்களிலும் பயணித்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News