செய்திகள்
70 சதவீத பங்குகளை பெற்று இலங்கை விமான நிலையத்தை இந்தியா நிர்வகிக்கிறது
மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. #India #Mattala #SriLanka #MattalaRajapaksaInternationalAirport
கொழும்பு:
இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. தற்போது, இந்தியாவை சரிக்கட்டும்வகையில், மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீதி 30 சதவீத பங்குகளே இலங்கை அரசிடம் இருக்கும்.
இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை இந்தியா புனரமைக்கும் என்று இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. தற்போது, இந்தியாவை சரிக்கட்டும்வகையில், மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீதி 30 சதவீத பங்குகளே இலங்கை அரசிடம் இருக்கும்.
இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை இந்தியா புனரமைக்கும் என்று இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் என்று தெரிகிறது.