செய்திகள்

அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி

Published On 2018-12-11 19:44 GMT   |   Update On 2018-12-11 19:44 GMT
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.

இந்த சதி தொடர்பாக ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என அறியப்படுகிற டேமன் ஜோசப் (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் கவரப்பட்டு, அந்த அமைப்புக்காக யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக நீண்ட காலம் சதி செய்து வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அவர் சதி செய்தபடி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் டேமன் ஜோசப் வெளியிட்ட பதிவுகளின் அடிப்படையில் அவரை மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. ஏஜெண்டுகள் பிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 2 யூத வழிபாட்டு தலங்களில் தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்காக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News