செய்திகள்

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்

Published On 2018-04-09 00:43 GMT   |   Update On 2018-04-09 00:43 GMT
ஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. #Tamilnews
Tags:    

Similar News