செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

Published On 2018-02-17 00:28 GMT   |   Update On 2018-02-17 00:28 GMT
மெக்சிகோ நாட்டின் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #MexicoEarthquake
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துகொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

கவுதமாலா நாட்டின் தெற்கு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கதினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 369 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #MexicoEarthquake #Mexico #earthquake #tamilnews
Tags:    

Similar News