செய்திகள்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2018-01-22 19:24 GMT   |   Update On 2018-01-22 19:24 GMT
டாவோஸ் நகரில் நடக்க உள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். #PMModi #WorldEconomicForum #WEF2018
புதுடெல்லி:

உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். அப்போது இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த மாநாட்டையொட்டி டாவோஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஒருங்கிணைந்த எதிர்கால நலன்களை உருவாக்குவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது. உலக பொருளாதார மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் பங்கேற்கிறார். கடைசியாக 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவே கவுடா இந்த மாநாட் டில் பங்கேற்று இருந்தார். #PMModi #WorldEconomicForum #WEF2018  #tamilnews
Tags:    

Similar News