செய்திகள்
ஹபீஸ் சயீத் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் பேட்டி
166 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தெரிவித்துள்ளார். # HafizSaeed #Pakistanpremier
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளான்.
அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷாஹித் காகான் அப்பாசி, ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். #tamilnews # HafizSaeed