செய்திகள்
சிரியா: முக்கிய பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றின
சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருந்த மிகப்பெரிய பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியது.
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.
இந்நிலையில், யூப்ரட்ட்எஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த மாதம் மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.
சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.
சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.
இந்நிலையில், யூப்ரட்ட்எஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த மாதம் மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.
சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.