செய்திகள்

ஜப்பானில் எரிமலை வெடித்தது: சாம்பலால் 4 நகரங்கள் பாதிப்பு

Published On 2017-10-13 05:12 GMT   |   Update On 2017-10-13 05:12 GMT
ஜப்பான் நாட்டில் ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெடித்தது. எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ:

ஜப்பானில் தென் மேற்கு பகுதியில் மியாசாகி மாகாணம் உள்ளது.

இங்குள்ள ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெடித்தது.

இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியது. அத்துடன் சாம்பலும் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுகிறது.

இதனால் எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மாணவ-மாணவிகள் ஹெல்மட் மற்றும் முகமூடிகளை அணிந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

எரிமலை பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News