செய்திகள்

பாகிஸ்தான்: பஸ்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Published On 2017-10-07 10:12 GMT   |   Update On 2017-10-07 10:12 GMT
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று பஸ் மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்ட்டாங் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த ஒரு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 30 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News