செய்திகள்

நியூசிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

Published On 2017-09-21 06:40 GMT   |   Update On 2017-09-21 06:40 GMT
நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய ஒருவர், திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெல்லிங்டன்:

நியூசிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வெளியே தீப்பிடித்து புகை வந்துள்ளது. அதனை கண்ட அனைவரும் தண்ணீரை ஊற்றி அணைக்க அருகில் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உடனே அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர்.



தீக்காயமடைந்த  நபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வேறு வழியாக வெளியேற்றப்பட்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர், அங்கு போராட்டம் நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் யார் என்பது அடையாளம் கண்டறியப்படவில்லை. அவர் தீக்குளித்த இடத்தில் கோரிக்கைகள் அடங்கிய பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News