செய்திகள்

36 ஆண்டுகளாக காதல்: ரெயில் நிலையத்தை திருமணம் செய்த நூதன பெண்

Published On 2017-05-27 05:23 GMT   |   Update On 2017-05-27 05:23 GMT
உலகின் எத்தனையோ நூதன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தான் நேசித்த ரெயில் நிலையத்தை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
கலிபோர்னியா:

உலகின் எத்தனையோ நூதன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் தான் நேசித்த ரெயில் நிலையத்தை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

அவரது பெயர் கரோல் சான்டே பி (45). அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர். தன்னார்வ தொண்டு செய்வதில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு.

இவரது வீட்டில் இருந்து 45 நிமிட பஸ் போக்குவரத்து தூரத்தில் ஒரு ரெயில் நிலையம் உள்ளது. அதன் மீது கரோலுக்கு 9 வயதில் இருந்தே தனி அன்பும் ஈர்ப்பும் ஏற்பட்டது.


அதுவே பின்னர் காதலாக மாறியது. எனவே தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரெயில் நிலையத்தை மனதளவில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது முதல் திருமண நினைவு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
Tags:    

Similar News