செய்திகள்

தென்ஆப்பரிக்கா: லாரியுடன் மினிபஸ் மோதி தீப்பிடித்ததில் 20 பள்ளி குழந்தைகள் கருகி உயிரிழப்பு

Published On 2017-04-21 15:19 GMT   |   Update On 2017-04-21 15:20 GMT
தென்ஆப்பிரிக்காவில் லாரியுடன் மினிபஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மினிபஸ்சில் இருந்த 20 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்ஆப்ரிக்காவில் உள்ள முமாலங்கா மாகாணத்தின் தலைநகர் பிரிடோரியா. இங்கிருந்து 45 மைல் தொலைவில் உள்ள வெரேனா - புரோங்கர்ஸ்ட்புரூட் சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸும் லாரியும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. ஏற்கனவே விபத்துக்குள்ளாகி பஸ் கவிழ்ந்தால் குழந்தைகளால் வெளியே வரமுடியவில்லை. இதனால் இடிபாடுகளில் சிக்கியும், தீயில் கருகியும் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரழந்தனர்.



சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புப்படையினர் விரைந்தனர். தீயணைப்புப்படையினர் தீயை அணைத்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

லாரியும் - பஸ்சும மோதுவதற்கு காரணம் குறித்த முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News