செய்திகள்

எகிப்து: ஐ.எஸ். தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் பலி

Published On 2017-04-19 04:55 GMT   |   Update On 2017-04-19 04:55 GMT
எகிப்து நாட்டின் கிழக்கில் உள்ள தெற்கு சினாய் பிரதேசத்தில் சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.
கெய்ரோ:

எகிப்து நாட்டின் கிழக்கில் உள்ள தெற்கு சினாய் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற புனித கேத்தரின் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்துக்கு அருகாமையில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். போலீசாரும் அதிரடியான எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்களில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனடியாக ஒரு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News