செய்திகள்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் உரசல்: பயணிகள் உயிர் தப்பினார்கள்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட், எமிரேட்ஸ் விமானங்கள் ஒன்றோடொன்று உரசின. இதில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினார்கள்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 303 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு டி.இசட்188 ஸ்கூட் விமானம் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணிக்கு சீனாவின் தியன்ஜின்-னுக்குப் புறப்படவிருந்தது.
பயணிகளை ஏற்றி்க்கொண்டு ஓடுதளத்திற்கு ஸ்கூட் விமானம் வந்து கொண்டிருந்தத. அப்போது அதனுடைய இடது பக்க இறக்கை அங்கிருந்த எமிரேட்ஸ் விமானத்துடன் உரசியது. இதனால் இரண்டு விமானத்திற்கும் சேதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் வேறு விமானத்துக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் நடந்த நேரத்தில் இ.கே.405 எமிரேட்ஸ் விமானம் துபாய்க்குப் புறப்படத் தயாராகி கொண்டிருந்தது.
சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனச் சாங்கி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.
பயணிகளை ஏற்றி்க்கொண்டு ஓடுதளத்திற்கு ஸ்கூட் விமானம் வந்து கொண்டிருந்தத. அப்போது அதனுடைய இடது பக்க இறக்கை அங்கிருந்த எமிரேட்ஸ் விமானத்துடன் உரசியது. இதனால் இரண்டு விமானத்திற்கும் சேதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் வேறு விமானத்துக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் நடந்த நேரத்தில் இ.கே.405 எமிரேட்ஸ் விமானம் துபாய்க்குப் புறப்படத் தயாராகி கொண்டிருந்தது.
சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனச் சாங்கி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.