செய்திகள்
வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம், சாக்லெட் திருடும் நூதன கொள்ளையன்
ஜப்பானில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
டோக்கியோ:
வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வார்கள். ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா (51) என்ற கொள்ளையன் வித்தியாசமானவன்.
இவன் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதில்லை. மாறாக குளிர்சாதன பெட்டியில் (ரெப்ஜிரெட்டர்) வைத்திருக்கு ‘குளுகுளு’ ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடினான்.
சமீபத்தில் அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இவன் கொள்ளையடித்து வருவதாக தெரிவித்தான். மேலும், இது போன்று 40-க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக அவன் கூறினான்.
வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வார்கள். ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா (51) என்ற கொள்ளையன் வித்தியாசமானவன்.
இவன் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதில்லை. மாறாக குளிர்சாதன பெட்டியில் (ரெப்ஜிரெட்டர்) வைத்திருக்கு ‘குளுகுளு’ ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடினான்.
சமீபத்தில் அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இவன் கொள்ளையடித்து வருவதாக தெரிவித்தான். மேலும், இது போன்று 40-க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக அவன் கூறினான்.