செய்திகள்

மாலியில் ராணுவ வீரர்கள் 11 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-03-07 00:25 GMT   |   Update On 2017-03-07 00:25 GMT
மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு தீவிரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 

Similar News