செய்திகள்

கென்யா: வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

Published On 2016-10-25 07:36 GMT   |   Update On 2016-10-25 08:01 GMT
கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேராவில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
நைரோபி:

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில், இதேபகுதியில் இதற்கு முன்னர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ள அல் ஷபாப் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Similar News