செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை

Published On 2016-09-09 08:21 GMT   |   Update On 2016-09-09 08:21 GMT
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
டெக்காஸ்:

அமெரிக்காவில் உள்ள டெக்காஸ் மாகாணத்தில் அல்பின் நகரில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு வந்த மாணவி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக மாணவியை சுட்டாள்.

அதில் அவள் காயம் அடைந்தாள். அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாள். காயம் அடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது உயிருக்கு ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதில் மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது.

Similar News