தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் தொடர்மழை- 53 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2023-05-11 05:18 GMT   |   Update On 2023-05-11 05:18 GMT
  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.80 அடி, வரத்து 413 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2221 மி.கனஅடி.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.30 அடி, வரத்து 31 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.88 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடைமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆண்டிபட்டி, அருகில் உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிடுகிடுவென சரிந்தது.

இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. நேற்று காலை 229 கனஅடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 784 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2409 மி.கனஅடியாக உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.80 அடி, வரத்து 413 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2221 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.30 அடி, வரத்து 31 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.88 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News