தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அறநிலையத்துறை செயலாளர் ஆய்வு

Published On 2023-02-04 05:30 GMT   |   Update On 2023-02-04 05:30 GMT
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்து வருகிறது.
  • அனைத்து இடங்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்து வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News