பா.ஜனதா நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்யானந்தா
- விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
- சூர்யா சிவா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை:
சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இதற்கு நன்றி கூறும் வகையில் சூர்யா சிவா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நித்தியானந்தா சுவாமியிடம் இருந்து கைலாசா தர்ம ரட்சகர் விருதை பெற்றது ஆசீர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்று கூறி உள்ளார்.