தமிழ்நாடு

மாவட்டம் தோறும் மாலை நேர உழவர் சந்தை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி திறந்து வைக்கிறார்

Published On 2022-08-07 06:28 GMT   |   Update On 2022-08-07 06:28 GMT
  • உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
  • பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

சென்னை:

கருணாநிதி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகள் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கண்டு கொள்ளாமல் கிடந்தது.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்ததும் உழவர் சந்தைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

பாழடைந்து கிடந்த உழவர் சந்தைகள் புதுப்பொலிவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இப்போது இந்த உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாலை நேர உழவர் சந்தை மாவட்டத்துக்கு 1 வீதம் 37 மாவட்டங்களிலும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந்தேதி திறந்து வைக்கிறார்.

இங்கு பயிறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் மாலை நேர உழவர் சந்தைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் 12-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News