தமிழ்நாடு

தூத்துக்குடியில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2023-08-30 05:51 GMT   |   Update On 2023-08-30 05:51 GMT
  • ஆண் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள வெள்ளப்பட்டி-சிலுவைப்பட்டி இடையேயான உப்பளப் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது உடலில் வெட்டுக்காயங்களுடன் லுங்கி அணிந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? என்று விசாரணை நடத்தினர். உப்பள பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதால் அவர் தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News