தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காரில் போர்த்தப்பட்டு இருந்த உறை எரிந்திருந்த காட்சி.

கோவையில் மேலும் ஒரு பா.ஜ.க. நிர்வாகி காரில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2022-09-24 04:17 GMT   |   Update On 2022-09-24 04:17 GMT
  • மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பதட்டம் நிலவியது.
  • பரத் தூங்கச் சென்றதும் மர்ம நபர்கள் அங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் தான் கார் எரிந்தது தெரியவந்தது.

கோவை:

கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் மீது நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன.

அவர்களின் வாகனங்களும் சேதம் அடைந்தன. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கோவையில் பதட்டம் நிலவியது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மேலும் ஒரு பாரதிய ஜனதா நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.

நள்ளிரவு 11.30 மணிக்கு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. உடனே பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் கார் தப்பியது. காரின் மேல் உறை போர்த்தப்பட்டு இருந்ததால் உறை மட்டும் எரிந்து இருந்தது, கார் தப்பியது.

பரத் தூங்கச் சென்றதும் மர்ம நபர்கள் அங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் தான் கார் எரிந்தது தெரியவந்தது. இதுபற்றி பரத் போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News