தமிழ்நாடு
என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு: மேலப்பாளையத்தில் சாலை மறியல்- 30 பேர் கைது
- நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழியிலும் சோதனை நடைபெற்றது.
- மேலப்பாளையம் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழியிலும் சோதனை நடைபெற்றது. இதனை கண்டித்து அந்த அமைப்பினர் நிர்வாகிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலப்பாளையம் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.