தமிழ்நாடு

திருமணமான 10 நாட்களில் தற்கொலை செய்த புதுப்பெண்- பரபரப்பு தகவல்கள்

Published On 2022-09-16 05:11 GMT   |   Update On 2022-09-16 05:11 GMT
  • திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • விமலா தேவியின் தாய் யார் மீதும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரை அடுத்த நல்லங்கியூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது 27), மொபைல் போன் சர்வீஸ் வேலை செய்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் காடப்பனூர் ஊராட்சி குதிரைக்கல்மேட்டை சேர்ந்த குப்புசாமி மகள் விமலாதேவி (வயது 20), இவர்களுக்கு கடந்த 5-ந் தேதி திருமணம் ஆனது.

இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த கமலாதேவி நேற்று முன்தினம் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடலை எரிக்க இரு வீட்டினரும் முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாப்பிள்ளை பிடிக்காமல் கட்டாயப்படுத்தி விமலாதேவிக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விமலா தேவியின் தாய் யார் மீதும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. இதனால் விமலா தேவி யாரையாவது காதலித்தாரா? அதற்கு பெற்றோர் சம்மதிக்காமல் கட்டயாப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News