தமிழ்நாடு

மாணவர்களின் எழுதுதல், படித்தல் திறனை மேம்படுத்த அரசு பள்ளிகளில் மொழி ஆய்வகத்திட்டம்: கல்வித்துறை உத்தரவு

Published On 2023-10-11 03:19 GMT   |   Update On 2023-10-11 05:18 GMT
  • நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

சென்னை:

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி 'தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம்' தொடங்கப்பட்டது. இது மாணவர்கள் தங்கள் கணினிகள் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுய வேக கற்றலை அதிகரிக்கும் தளமாக பயன்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த திட்டத்துக்காக 6,029 அரசு பள்ளிகளில் ஆங்கில பாடத்தை கையாளும் ஆசிரியர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கில பாடவேளை மொழி ஆய்வக திட்டத்துக்காக ஒதுக்கப்படும். அந்த நாளில் மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரிசெய்வதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கான பாடவேளை அட்டவணைகளை உருவாக்க வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News