தமிழ்நாடு

குடியாத்தம் : ஏரியில் மூழ்கி 4 பெண்கள் மரணம்

Published On 2024-03-30 16:24 GMT   |   Update On 2024-03-30 16:24 GMT
  • வேப்பூர் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்
  • கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது, ஏரியில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News