தமிழ்நாடு

ஜிகே வாசன்

ஆந்திராவில் புதிய தடுப்பணைகள் கட்ட அனுமதிக்கக் கூடாது- ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2022-09-27 03:58 GMT   |   Update On 2022-09-27 03:58 GMT
  • பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
  • தமிழக அரசு நம்முடைய உரிமைகளை ஆந்திர அரசுடன் பேசி நிலைநாட்ட வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முடிவை உடனடி யாக கைவிட வேண்டும்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி, தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஆந்திர அரசு பாலாற்றில் புதிய தடுப்பணை பணிகளை மேற்கொள்ள கூடாது.

மேலும் மிக முக்கியமாக தமிழக அரசு, நம்முடைய உரிமைகளை ஆந்திர அரசுடன் பேசி நிலைநாட்ட வேண்டும். அதன் அடிப்படையில் சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News