தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
- சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- சம்மனில் விசரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இருவரும் விசரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.