செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-06 09:01 GMT   |   Update On 2021-04-06 09:29 GMT
குளித்தலை அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 42). இவர் மலேசியாவில் பல வருடங்களாக கட்டிட கட்டுமான சென்டிரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக திருச்சி மாவட்டம் அல்லூர் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சங்கர் குளித்தலை சங்கிலிராயன் கோவில் தெருவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். 

சம்பவத்தன்று சங்கருக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்ததால் விஷ மருந்தை குடித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் கடந்த 2-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News