செய்திகள்
கர்ணன்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2021-02-16 07:52 GMT   |   Update On 2021-02-16 07:52 GMT
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

சென்னை மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ்.கர்ணன்.

இவர் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்ப பெண்கள், பெண் வக்கீல்கள், உயர்நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2ந்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரிமனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News