செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.58 அடியாக உயர்வு

Published On 2020-11-24 06:34 GMT   |   Update On 2020-11-24 06:34 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று 98.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 98.58 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 464 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 89 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 98.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 98.58 அடியாக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News