செய்திகள்
கைது

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2020-08-07 11:57 GMT   |   Update On 2020-08-07 11:57 GMT
புழல் அருகே டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருளை திருடி அதை கலப்படம் செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
புழல்:

புழல் பகுதியில்  தனியார்  லாரி குடோனில் பெட்ரோல், டீசல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்  சோதனை மேற்கொண்டனர். அப்போது  எண்ணெய் நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடி கலப்படம் செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 12 டேங்கர் லாரிகள், 500 லிட்டர் டீசல், 700 லிட்டர் பெட்ரோல், கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரி ஓட்டுனர்கள் உதவியுடன் குடோனிற்கு லாரிகளை கொண்டு வந்து அதன் சீலை  உடைக்காமல் பெட்ரோல், டீசல் திருட்டு நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News