செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

Published On 2020-08-04 11:14 GMT   |   Update On 2020-08-04 11:14 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.
சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் உயரம் 16 புள்ளி 9 அடியாகவும், ஆயிரத்து 900 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு நாள்தோறும் 32 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும், முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Tags:    

Similar News