செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீட்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒகேனக்கல்லில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு 3 ஆயிரத்து 581 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 118 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீட்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 101.38 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.50 அடியானது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒகேனக்கல்லில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு 3 ஆயிரத்து 581 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 118 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீட்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 101.38 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.50 அடியானது.