செய்திகள்
கொலை

கிருஷ்ணகிரியில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

Published On 2020-06-03 06:56 GMT   |   Update On 2020-06-03 06:56 GMT
கிருஷ்ணகிரியில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் மயானத்தில் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள பாரதியார் நகரில் இன்று காலை துண்டிக்கப்பட்ட கை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து துண்டிக்கப்பட்டு கிடந்த கையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது கிருஷ்ணகிரி- சென்னை தேசியநெடுஞ்சாலை திருவண்ணாமலை செல்லும் சாலையில் பொய்யான் கொட்டாய் என்ற இடத்தில் உள்ள மயானத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடந்தது. அந்த வாலிபரின் உடலில் கையை வெட்டப்பட்ட நிலையிலும், தலையில் பலத்த காயங்களுடன் இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரித்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே போலீசாருக்கு தெரியவில்லை.

தொழிலாளியை யாரோ மர்மநபர்கள் கையை வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் உடலை பொய்யான் கொட்டாய் பகுதியில் மயானத்திலும், கை பகுதியை பாரதியார் நகரிலும் மர்ம கும்பல் வீசி சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவரை யாராவது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தார்களா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தால் அவரை கொலை செய்தார்களா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News