செய்திகள்
கோவை அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய எம்.எல்.ஏ.
கோவை அருகே அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
துடியலூர்:
கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் கீழே விழுந்தார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் செயலை பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் கீழே விழுந்தார்.
இதில் அந்த பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு, தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் செயலை பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.