செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டை போல ஐகோர்ட்டிலும் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கவேண்டும் - வக்கீல் சங்கங்கள் கோரிக்கை
சுப்ரீம் கோர்ட்டை போல சென்னை ஐகோர்ட்டிலும் முக்கிய மற்றும் அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வக்கீல் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டும் வக்கீல்கள், பொதுமக்கள் அதிக அளவில் குளுகுளு வசதிகொண்ட கோர்ட்டு அறைக்குள் கூடுவதை தவிர்க்கும் விதமாக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.
இதேபோல சென்னை ஐகோர்ட்டிலும் முக்கிய மற்றும் அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற வழக்குகளை தள்ளிவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக நிர்வாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாஹியை வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து இன்று காலையில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டும் வக்கீல்கள், பொதுமக்கள் அதிக அளவில் குளுகுளு வசதிகொண்ட கோர்ட்டு அறைக்குள் கூடுவதை தவிர்க்கும் விதமாக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.
இதேபோல சென்னை ஐகோர்ட்டிலும் முக்கிய மற்றும் அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற வழக்குகளை தள்ளிவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக நிர்வாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாஹியை வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து இன்று காலையில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.