செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2020-03-10 04:17 GMT   |   Update On 2020-03-10 04:17 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 120 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 8-ந்தேதி 195 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 116 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மீண்டும் அதிகரித்து 120 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியாற்றில் 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 104.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.53 அடியாக இருந்தது.
Tags:    

Similar News